search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சிங் மாணவி"

    • அஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அம்மன் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தியாகதுருகம் செல்வா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்வினி (20) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் சம்ப வத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது தந்தை நடராஜன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.

    டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கோவில்பட்டி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அடிக்கடி வெளியூரில் வசிக்கும் தனது மகன், மகள்களை பார்த்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்ற மணி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணியின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய்-தம்பிகள் பாசப்போராட்டம் நடத்தியும் பலனளிக்கவில்லை
    • அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வெளியூரில் நர்சிங் படித்து வருகிறார்.

    இவரது தந்தை வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் மற்றும் 2 தம்பிகள் ஊரில் வசித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தினமும் தாயாரி டம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குடும்பத்தி னருடன் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் அழைத்துப் பார்த்த போது, மாணவியின் போன் சுவிட்ச் ஆப் என தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் கல்லூரிக்கு வந்து விசாரித்தார். அப்போது மாணவி அங்கு இல்லை. மகள் மாயமானது குறித்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருவட்டார் போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் கல்லூரி உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து மாணவியையும் அவரது காதலனையும் போலீசார் தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி, காதல னுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் மகள் போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து மாணவியின் தாயார், தனது 2 மகன்களுடன் ேபாலீஸ் நிலையம் வந்தார்.

    அவர், தனது மகளை சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவரோ மறுத்து விட்டார். காதலனோடு செல்வதி லேயே உறுதியாக இருந்தார். மாணவியை அவரது தம்பி களும் கண்ணீர் மல்க அழை த்துப் பார்த்தனர்.

    ஒரு கட்டத்தில் 2 தம்பி களில் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இத்தனை பாசப் போராட்டங்கள் நடந்த பிறகும் மாணவியின் மனம் மாறவில்லை. அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தார்.

    • தனியார் நிறுவன தட்டச்சர் நந்தினி தனது தாயாரிடம் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்
    • பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்த சகாய லூர்து பாப்பு மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நாட்களாக வரவில்லை.1

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்ட விளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தினி (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தட்டச்சராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நந்தினி தனது தாயாரை தொடர்பு கொண்டு வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    கொல்லங்கோடு அருகே சந்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தி (18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த நிஷாந்தி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது தாயார் மகள் நிஷாந்தியை தேடினார்.அப்போது வீட்டில் இருந்து சான்றிதழ்களுடன் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது தாயார் ராணி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம்மவுண்ட் பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.இவரது மனைவி சகாய லூர்து பாப்பு (31). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.சகாய லூர்து பாப்பு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற அவர் நீண்ட நாட்களாக வரவில்லை.இதையடுத்து சிவகுமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    • நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.தோப்பூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 20). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது பெருநாழியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரும், கீர்த்தனாவும் காதலித்ததாக கூறப்படு கிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த கீர்த்தனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர். பின்னர் அருப்பு க்கோட்டை போலீசார் கீர்த்தனா-அப்துல்ரகுமானை அழைத்து அறிவுரை கூறி னர். ஆனாலும் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்ரகுமான் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வேறொரு பெண்ணை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதனால் கீர்த்தனா யாருடனும் பேசாமல் விரக்தி யுடன் காணப்பட்டார். பெற்றோரும் மகளை சமரசம் செய்தனர். ஆனா லும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தனா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த காரியா பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சுந்தரமூர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் நர்சிங் கல்லூரி மாணவி திடீரென இறந்தார்.
    • பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி போலீஸ் சரகம் குராயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையத்துரை. இவருடைய மகள் பவானி(19). இவர் திருநகரில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற் காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது பவானி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பவானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
    • கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்ஸில் வந்தார். ஊரிலிருந்து பஸ்ஸில் வடசேரிக்கு வந்த போது பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார்.இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர்.அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.

    உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பெரிய வந்துள்ளது.

    அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறா ர்கள். ஒடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததால் போலீசார் மற்றும் என்.ஐ. ஏ அதிகாரிகள் ராதிகாவின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
    • தகவல் அறிந்த ராதிகா போலீசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெடபயலு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (வயது 20). இவர் அங்குள்ள நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ராதிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அவரது பெற்றோர் தங்களது மகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேடினர். ஆனால் ராதிகாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து மகள் காணாமல் போனது குறித்து பெடபயலு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது. ராதிகா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததால் போலீசார் மற்றும் என்.ஐ. ஏ அதிகாரிகள் ராதிகாவின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    இந்த தகவல் அறிந்த ராதிகா போலீசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 20 வயதானதால் நான் மேஜர். எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க முடியும். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் உரிமையை காப்பாற்றவே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது சைதன்யா மகிளா சங்கத்தில் சேர்ந்தேன். அப்போது மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தம் எனக்கு பிடித்து போகவே அந்த இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை.

    எனவே போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்னுடைய பெற்றோரை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.

    • நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த மாணவி தனது காதலனுடன் மாயமானார்.
    • போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகில் உள்ள கெங்குவார்பட்டி ஸ்ரீராம்நகரை சேர்ந்த சரவணன் மகள் சரண்யா என்ற லோகநாயகி(20). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    அப்போது நிலக்கோட்டை வெரியப்பன்பட்டியை சேர்ந்த வீரக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பேசிபழகி வந்துள்ளார். இதனை அவரது தாய் சந்தனலட்சுமி கண்டித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சரண்யா வத்தலக்குண்டு சென்று வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது மகனை வீரக்குமார்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று அவரது தாய் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×